Tuesday, May 30, 2017

•நல்ல செய்தி வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே!

•நல்ல செய்தி வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே!
இரண்டு கிழமையில் தமிழ் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று சம்பந்தர் அய்யா மே தினத்தில் கூறினார்.
சம்பந்தர் அய்யா கூறியபடி நல்ல செய்தி வருவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.
நல்ல செய்தி வருமா அல்லது இதுவும் சம்பந்தர் அய்யாவின் வழக்கமான ஏமாற்றா என்பது நாளைய தினம் தெரிந்துவிடும்.
இதோ இந்த படத்தில் உள்ள வீடானது திருகோணமலையில் கப்பல்துறை கிராமத்தில் உள்ள வீடுகளின் நிலையை காட்டுகிறது.
இந்த கப்பல்துறை கிராமமானது 1996ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் சமாதானத்திற்கான கிராமமாக தோற்றுவிக்கப்பட்டது.
இந்த கிராமம் தொடர்ந்தும் அபிவிருத்தி குன்றிய கிராமமாகவே காணப்படுகிறது. இந்த கிராமத்தின் பாராளமன்ற உறுப்பினராக சம்பந்தர் அய்யா இருக்கிறார்.
திருகோணமலை மாவட்ட கோயில் ஒன்றின் புனரமைப்புக்கு 150 லட்சம் ரூபா பணத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளார் சம்பந்தர் அய்யா.
தனக்கு வாக்குபோட்ட மக்கள் ஓட்டை வீட்டிற்குள்ள வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு எந்த உதவியையும் பெற்றுக் கொடுக்காமல் கோயில் கட்டுவதற்கு நிதி பெற்றுக் கொடுக்கிறார் சம்பந்தர் அய்யா.
சம்பந்தர் அய்யா விரும்பினால் தனது சொந்தப் பணத்தில் கோயில் கட்டிக் கொள்ளட்டும்.
அதைவிடுத்து மக்கள் வீடு இன்றி இருக்கும்போது அரச பணம் பெற்று கோயில் கட்டுவது என்ன நியாயம்?

No comments:

Post a Comment