Tuesday, May 30, 2017

•இந்திய பிரதமர் வருகையை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும்!

•இந்திய பிரதமர் வருகையை
தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும்!
இந்திய பிரதமர் மோடி எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் வருவதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவர் வருவது சில ஆக்கிரமிப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவே.
இலங்கை பிரதமர் ரணில் அண்மையில் இந்தியா சென்ற பொது திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ள இருந்தார்.
ஆனால் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருமித்த போராட்டத்தினால் அவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது பிரதமர் மோடி வருகையின் போது அவ் ஒப்பந்தம் இரகசியமாக செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
திருகோணமலை எண்ணெய் குதம் மட்டுமன்றி காங்கேசன் துறைமுகமும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.
தமிழ் மக்களின் நிலங்கள் சொத்துகள் யாவும் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி இந்தியாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதால் அவ்வூர் தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீண்டும் குடியேற முடியாமல் உள்ளது.
எனவே இந்நிலையில் தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்பு எதிராக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
தமிழ் தலைமைகள் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போவதாகவே இருக்கின்றன. அவைகள் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் யாவும் இந்திய நலனுக்குரியதாகவே இருக்கின்றது என்றும் எனவே இவ் ஒப்பந்தங்களை எதிர்க்கப்போவதாக ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைதூதர் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவும் கருத்து தெரிவிக்கவில்லை.
எனவே தமிழ் மக்கள் தாங்களாகவே இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதன் மூலமே இந்திய பிரதமர் மற்றும் தூதர் அகியோரின் ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும்.
இந்தியாவுடன் அதிகளவு ஒப்பந்தங்களை செய்து இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போனவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே.
இப்போது அவர் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே.
இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் மக்கள் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment