Tuesday, May 30, 2017

•காஸ்மீர் தேசிய இனத்தை அடக்கும் இந்தியா தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கு உதவுமா?

•காஸ்மீர் தேசிய இனத்தை அடக்கும் இந்தியா
தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கு உதவுமா?
இந்த காஸ்மீர் தேசிய இன மாணவிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராக எறிவது வெறும் கற்கள் மட்டும் அல்ல.
இந்த காஸ்மீர் மாணவிகள் வெளிப்படுத்துவது இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான காஸ்மீர் தேசிய இனத்தின் விடுதலை உணர்வுகள்.
காஸ்மீர் தேசிய இனம் மட்டுமல்ல, மணிப்பூர், சிக்கிம், நாகலாந்து, அசாம் தேசிய இன மக்களும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
தனது நாட்டில் தனது சொந்த இன மக்களை நசுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் தேசிய இன விடுதலைக்கு உதவும் என சில இந்திய விசுவாசித் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இத்தனை அழிவிற்கும் பிறகும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசை இலங்கை தமிழ் தேசிய இன மக்கள் எப்படி நம்ப முடியும்?
எதிர்வரும் 12ம் திகதி வெசாக் பண்டிகைக்காக இலங்கை வரும் இந்திய பிரதமரிடம் தமிழர் பிரச்சனை பற்றி விளக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா கூறியுள்ளார்.
தமிழர் பிரச்சனையை விளக்கினாலும் மோடியால் தீர்வு பெற்று தரப்படுமா என்பது ஒருபுறம் இருக்க, இதுவரை மோடிக்கு தமிழர் பிரச்சனை விளக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதுவரை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், முதன்மை அதிகாரிகள் பலரை கடந்த இரண்டு வருடத்தில் 12 தடவைக்கு மேல் சம்பந்தர் அய்யா சந்தித்துள்ளார். இதுவரை தமிழர் பிரச்சனை விளக்கப்பட வில்லை என்றால் வேறு என்னதான் கதைத்துள்ளார்?
இந்த மாதம் 12ம் திகதி இந்திய பிரதமர் மோடி வருகிறார். 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரி முல்லைதீவு வருகிறார். இந்த விஜயங்கள் யாவும் தற்செயலானவை அல்ல. நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் ஆகும்.
தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி , தமிழ் மக்கள் உயிர் நீத்த தம் உறவுகளை நினைவு கூருவதையும் குழப்புவதற்காகவே நன்கு திட்டமிட்டு இவ் விஜயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சம்பந்தர் அய்யாவுக்கு சில சலுகைகளை கொடுத்துவிட்டு அவர் மூலம் மொத்த தமிழ் சமூகத்தையும் ஏமாற்றிவிட இலங்கை இந்திய அரசுகள் நினைக்கின்றன.
ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இனி யாரையும் நம்பி ஏமாறப் போவதில்லை. காஸ்மீர் உட்பட இந்தியாவுக்கு எதிராக போராடும் மக்களுடன் ஜக்கியப்பட்டு போராடுவார்கள்.

No comments:

Post a Comment