Wednesday, May 31, 2017

•எடப்பாடி அரசே!

•எடப்பாடி அரசே!
மோடி அரசு சொல்லித்தான் திருமுருகன்காந்தியை நீங்கள் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் மோடி அரசு சொல்லாமலே மோடி அரசுக்காக எதையும் செய்வதற்கு சித்தமாகவே நீங்கள் உள்ளீர்கள்.
ஆட்சியையும் பதவியையும் தக்க வைப்பதற்காக மோடி அரசை திருப்திப்படுத்த எதையும் செய்யும் நிலையில்தான் உங்கள் அரசு இருக்கிறது.
ஆனால் இங்கு எனது கவலை என்னவென்றால் மோடி மகிழ்வார் என்று நினைத்துக்கொண்டு இந்த சிறுவனை பிடித்து சிறையில் அடைத்துவிடப் போகிறீர்களோ என்பதுதான்.
அதைவிட அச்சம் என்னவெனில் உங்கள் காவல்துறை இந்த சிறுவனை கைது செய்யும்போது பொரி உருண்டை, குச்சி ஜஸ் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக அறிக்கை விட்டுத் தொலைக்கப் போகிறார்கள்.
ஆனால் ஒன்று, இந்த சிறுவன் கைகள் எப்போதும் அமைதியாக பலகையை பிடித்துக் கொண்டு நிற்கும் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.
இந்த சிறுவனின் கைகள் இனிவரும் காலத்தில் கல் எறிய வேண்டுமா , துப்பாக்கி தூக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கப் போகிறீர்கள்.
அமைதி வழியில் போராடுபவர்கள் மீது அரசு வன்முறையை பாவித்து அடக்க முயன்றால் அவர்கள் அதே வன்முறை மூலம் பதில் அளிக்க தள்ளப்படுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
குறிப்பு- ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன்காந்திக்கு ஆதரவாக இதுவரை ஒரு ஈழத் தமிழ் தலைவரும் குரல் கொடுக்கவில்லை. எனக்கென்னவோ இந்த சிறுவன் இந்து தமிழீழம் கேட்ட காசிஆனந்தன் அய்யா முகத்தில் ஓங்கி குத்தியிருப்தாகவே உணர்கிறேன்.

No comments:

Post a Comment