Wednesday, September 20, 2023

செய்தி – அமரர் வி.தர்மலிங்கத்தின்

செய்தி – அமரர் வி.தர்மலிங்கத்தின் 38வது நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு 02.09.1985 யன்று தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக் கொலையை தலைவர் சிறீ சபாரட்ணம் உத்தரவுக்கு அமைய டெலோ இயக்கத்தின் பொபி குறூப் செய்தது. அன்று வடமராட்சியில் இருந்த பாராளமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம் மற்றும் இராசலிங்கத்தையும் கொல்லுமாறும் சிறீ சபாரட்ணம் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தலைமையுடன் இருந்த முரண் காரணமாக டெலோவின் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் இவர்களை கொலை செய்ய மறுத்துவிட்டார். இந்த நான்கு பாராளமன்ற உறுப்பினர்களும் அமிர், சம்பந்தர் போல் இந்தியா செல்லாமல் ஊரில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு டெலோ இயக்கத்தோடு மட்டுமன்றி எந்தவொரு இயக்கத்துடன் முரண் இருந்ததில்லை. ஆனாலும் இவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் இந்திய உளவுப்படையே. இந்திய உளவுப்படை கூறியபடியே இவர்களை டெலோ கொன்றது. இந்திய உளவுப்படையின் உத்தரவுப்படியே டெலொ இயக்கம் கொன்றது என்பது தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தனுக்கு மட்டுமன்றி அமிர், மாவை, சம்பந்தர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். ஆனால் இதுவரை ஏன் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை கொன்றீர்கள் என்று இந்திய அரசை இவர்கள் கேட்கவும் இல்லை. இந்திய அரசை கண்டிக்கவும் இல்லை. மாறாக கொல்லச் சொன்ன அந்த இந்திய அரசிடம் தீர்வு கேட்டு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தமது பதவி நலனுக்காக எதையும் செய்வார்கள் என்பது தெரிந்த விடயம்தான். ஆனால் “இந்திய அரசு பல உதவிகள் செய்தது. ஈழத் தமிழர்தான் நன்றி கெட்டத்தனமாக இருக்கிறார்கள்” என்று இன்றும் சிலர் இந்தியாவில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய அரசு ஏன் கொன்றது என்பதற்கு என்ன பதில் கூறுவார்கள்?

No comments:

Post a Comment