Saturday, September 30, 2023

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சூத்திரதாரி

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரானுடன் இந்திய உளவுப்பிரிவு தொடர்பு வைத்திருந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கா தெரிவித்துள்ளார். “அபூஹிந்” என்பது இந்திய புலனாய்வு பிரிவு சஹ்ரான் மற்றும் சிலருடன் கலந்துரையாட பயன்படுத்திய சொல் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். அசாத் மௌலானா சனல் 4 க்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு பற்றி கூறியிருக்கிறார். (1) றோ தலைவர் தமக்கு 25000 டாலர் பணம் தந்ததாக குறிப்பிடுகிறார். (2) கேரளாவில் தமது உறுப்பினர்களுக்கு பயிற்சி தரப்பட்டதாக கூறுகின்றார். (3) இந்தியாவின் தாஜ் ஓட்டலில் குண்டு வைக்கப்போனபோது இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறுகின்றார். ஈஸ்டர் குண்டு வெடிப்பில் இந்திய புலனாய்வு பிரிவின் தொடர்பு குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை குறித்து இந்திய அரசோ அல்லது இந்திய தூதுவரோ இதுவரை கருத்து தெரிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment