Saturday, September 30, 2023

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும். சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சுஇலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும் திலீபன் நினைவிடத்தில் பறக்கும் மஞ்சள் சிவப்பு கொடிகள் சிங்கள அரசுக்கு அச்சத்தைக் கொடுக்கிறதாம். அக் கொடிகளை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியுள்ளன. வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குதுன்னா அது எதிரிகளுக்கு நாம குடுக்கிற நடுக்கம்தான்.

No comments:

Post a Comment