Wednesday, September 20, 2023

ஏழு முறை கருக்கலைப்பு.

ஏழு முறை கருக்கலைப்பு. அதற்கு 13 வருடங்கள் கழித்து மருத்துவ பரிசோதனை. இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு நடிகைக்கு நீதி பெற்றுக்கொடுக்க திராவிட அரசு எடுக்கும் முயற்சிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இதேபோல் தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை சிறீரெட்டி கூறினாரே. அவருக்கும் பரிசோதனை செய்து நீதி பெற்றுக் கொடுக்கப்படுமா? அல்லது, நடிகை நயன்தாராவிற்காக ஒரு இளம் தலைவர் பால்டாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றாரே. அவருக்காக நயன்தாராவிற்கு பரிசோதனை செய்யப்படுமா? ஒருபுறம் சனாதன ஒழிப்பு பிரச்சனை. இன்னொரு புறம் விஜயலட்சுமி பிரச்சனை. மக்கள் கவனத்தை திருப்பி ஏமாற்றுகிறது திராவிட அரசு. மக்கள் பிரச்சனைகளை எப்போதுதான் இந்த திராவிட அரசு கவனத்தில் எடுக்கப்போகிறது? குறிப்பு – விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்கக்கூடாது என நான் கூறவில்லை. மாறாக இதேபோல் மற்றவர்களுக்கும் கிடைக்குமா என்பதே என் கேள்வி. உதாரணமாக கவிஞர் வயிரமுத்து மீது இதுவரை 17 பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. அது ஏன்?

No comments:

Post a Comment