Wednesday, September 20, 2023

இந்தியாவில் ஒருவர் இரண்டு மனைவிகளை

இந்தியாவில் ஒருவர் இரண்டு மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். ஆனால் கலைஞர் மனைவி , துணைவி என்று இரண்டு பேரை வைத்திருந்தார். அவர் மீது அவர் இறக்கும்வரை யாரும் இதற்காக வழக்கு பதிவு செய்யவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை? ஒருமுறை ராஜாத்தியம்மாள் யார் என்று கேட்டபோது “ அவர் என் மகள் கனிமொழியின் தாயார்” என்று கலைஞர் பதில் கொடுத்தார். ஆனால் இந்த ராஜாத்தியம்மாள் இன்னொருவரின் மனைவி என்கிறார்கள். அப்படியென்றால் இன்னொருவரின் மனைவிக்கு கலைஞரின் மகள் எப்படி வந்தது என்றும் புரியவில்லை. இங்கு எனது கேள்வி என்னவெனில் மனைவி துணைவி என்று இரண்டு பெண்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட கூச்சமின்றி “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு” என்று கலைஞரால் எப்படி பேச முடிந்தது? அப்படிப்பட்ட கலைஞரை “உலக தமிழின தலைவர்”என்று எப்படி திமுக வினரால் கூற முடிகிறது? நான் ஒரு தமிழன். எனக்கு எப்படி இந்த கலைஞர் தலைவராக முடியும்?

No comments:

Post a Comment