Wednesday, September 20, 2023

ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு நியாயம்

•ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு நியாயம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இன்னொரு நியாயம் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கோரியுள்ளார் அவர் மட்டுமன்றி கிருத்தவ மத தலைவர் மால்கம் ரஞ்தித் அவர்களும் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். ஆம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணை அவசியமே. ஆனால் இவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுக்கிறார்கள். ஈஸ்டர் குண்டு வெடிப்பில் 269 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் இரண்டு நாளில் நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 269 பேர் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச விசாரணை கோரும் இவர்கள் நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச விசாரணையை மறுக்கிறார்கள். இவர்களுக்கு வந்தா ரத்தம். தமிழர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment