Wednesday, September 20, 2023

இன்னும் வெளிவராத உண்மைகள்!

• இன்னும் வெளிவராத உண்மைகள்! ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக சில உண்மைகளை ஆதாரத்துடன் சனல்-4 வெளியிட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில உண்மைகள் வெளிவர வேண்டியுள்ளது. (1) குண்டு வெடிப்பதற்கு முன்னரே இந்திய புலனாய்வு அமைப்பு சகல விபரங்களையும் இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? (2) குண்டு வெடிப்பின் சூத்திரதாரி சஹரான் பல தடவை தமிழ்நாடு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? (3) தமிழ்நாட்டில் இருந்தே இக் குண்டு வெடிப்பிற்கு தேவையான ஆர்டி எக்ஸ் வெடி மருந்து வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா? (4) இக் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவில் விசாரணை செய்ய இந்திய அரசு ஒத்துழைக்கவில்லை என இலங்கை பொலிசார் கூறியுள்ளனர். ஏன் இந்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது? (5) இக் குண்டு வெடிப்பு இந்திய தேர்தலுக்காக தமிழ்நாட்டில் நடக்க இருந்தது என்றும் இறுதி நேரத்திலேயே இலங்கைக்கு மாற்றப்பட்டது என்றும் கூறப்படுவது உண்மையா? ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் மட்டுமே இவை தொடர்பான உண்மைகள் வெளிவரும்.

No comments:

Post a Comment