Saturday, September 30, 2023

பயங்கரவாதி” என்றார்கள்

“ “கொலைகாரன்” என்று தமது கைக்கூலிகளை வைத்து பிரச்சாரம் செய்தார்கள் நினைவு ஊர்தியை காடையர்களை வைத்து தாக்கினார்கள் நினைவு கூர்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டினார்கள். எத்தனை தடைகள்? எத்தனை நெருக்கடிகள்? அத்தனையும் எப்படி இந்த மக்களால் தகர்க்கப்படுகிறது? வழி நடத்த தலைவன் இல்லை. பற்றிப் பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது? கொட்டும் மழையிலும் பெரியவர் முதல் சிறியவர் வரை திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் அளித்துள்ள பதில் இது. இதை இனியாவது சிங்கள அரசும் இந்திய அரசும் புரிந்து கொள்ளுமா?

No comments:

Post a Comment