Wednesday, September 20, 2023

அனா அம்மையாரும்

•அனா அம்மையாரும் ஜனநாயக மாதர் சங்க அம்மையார்களும் !! அனா அம்மையார். இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர். தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வந்தவர் வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். நடிகை விஜயலட்சுமி தான் பலருடன் உறவில் இருந்ததாகவும் ஆறுமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் இதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 13 வருடம் கழித்து வந்து முறையிட்டிருக்கிறார். காவல்துறையும் விசாரணை செய்து நீதிபதி முன் அவர் வாக்குமூலம் பெற்றதுடன் விசாரணைக்கு வரும்படி சீமானுக்கு அழைப்பும் விட்டிருக்கின்றது. ஆனாலும் சீமானைக் கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமிக்காக காவல்நிலையம் சென்று குரல் கொடுத்துள்ளனர் ஜனநாயக மாதர் சங்க அம்மையார்கள். நல்லது. பெண்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவெனில் , நடிகை விஜயலட்சுமிக்காக குரல் கொடுக்கும் இந்த ஜனநாயக மாதர் சங்க அம்மையார்கள் ஏன் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதில்லை?

No comments:

Post a Comment