Saturday, September 30, 2023

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன்

•கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் எங்கே என்று கேட்கும் தைரியம் தமிழக ஊடகவியலாளர் யாருக்காவது உண்டா? சீமானிடம் ஓடி ஓடி கேள்வி கேட்கும் ஊடகவியலாளர் யாராவது கலைஞர் தத்தெடுத்த அகதிச் சிறுவன் எங்கே என்று ஸ்டாலினிடம் கேட்கும் தைரியம் உண்டா? முதன் முதலாக பொது வெளியில் கலைஞர் தத்தெடுத்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே என்று கேட்டவர் முன்னாள் அமைச்சர் பரிதிஇளம் வழுதி. மணி என்னும் அகதிச் சிறுவனை கலைஞர் தத்தெடுத்து வளர்த்தது உண்மைதான் என்று நெடுமாறன் ஐயா அவர்கள் அண்மையில் ஆவல் கணேசன் என்பவரிடம் கூறியுள்ளார். இது தொடர்பான விபரங்களை தமிழக ஊடகவியலாளர் பலருக்கு தெரிவித்து அந்த அகதிச் சிறுவனை கண்டு பிடிக்க உதவுமாறு கோரினேன் ஆனால் எந்தவொரு ஊடகவியலாளரும் இது குறித்து உதவ முன்வரவில்லை. ஸ்டாலினிடம் கேட்கவும் தயாராக இல்லை.

No comments:

Post a Comment