Wednesday, September 20, 2023

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின்

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஈழத் தமிழர் பேராசிரியர் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். பிரித்தானியாவுக்கு சென்ற ஈழத் தமிழர் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பெற்று லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் மருத்துவ உயர் கல்வியைக்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர். உலகெங்கும் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று உயர் கல்வி பெற்று உயர் பதவிகளை வகிக்க முடிகிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment