Saturday, September 30, 2023

வாசாத்தி

• வாசாத்தி விடுதலை படத்தில் ஒரு கிராமத்தை சுற்றி வழைத்து அங்குள்ள பெண்களை பிடித்துச் சென்று பொலிசார் சித்திரவதை செய்வதை காட்டியிருப்பார்கள். அதில் பெண்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யும் காட்சிகளை பார்த்த பலரும் மிகவும் கொடுமையாக இருப்பதாக கூறியிருந்தார்கள். இது வாசாத்தியில் நடந்த சம்பவத்தையே குறிக்கின்றது. ஆனால் உண்மையில் அங்கு நடந்தவை படத்தில் காட்டப்பட்டதைவிட கொடுமையானவை. வழக்கமாக காவல்துறையினர் செய்யும் இவ் அக்கிரமங்களுக்கு துணையாகவே அரசும் நீதித்துறையும் இருக்கும். ஆனால் அதிர்ஸ்டவசமாக வாசாத்தி சம்பவத்தில் நீதித்துறை சம்பந்தப்பட்ட காவல்துறையினரை தண்டித்துள்ளது. முதன்மை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதிமன்றமும் இன்று உறுதிசெய்துள்ளது. இது அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் காவல்துறையினருக்கு ஒரு பாடமாக அமையும்.

No comments:

Post a Comment