Saturday, September 30, 2023

பங்களாதேஷ் நாட்டில் முக்திபானி

பங்களாதேஷ் நாட்டில் முக்திபானி என்ற இயக்கத்திற்கு ஆயுதம் பயிற்சி அனைத்தும் வழங்கி உதவி செய்துவிட்டு வங்கதேச விடுதலை அடைந்ததும் அந்த இயக்கத்தை கொன்று அழித்தது இந்திய அரசு. இதுதான் வங்கம் தந்த பாடம் இந்த “வங்கம் தந்த பாடம்” நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் புளட் இயக்க சந்ததியார். இதனை றோ உளவுப்படையிடம் கொண்டுபோய் போட்டுக் கொடுத்தவர் (இன்று புரட்சியாளர் என்று சிலை வைக்கப்பட்டிருக்கும்) தோழர் பத்மநாபா. வேடிக்கை என்னவெனில் இதே பத்மநாபாவின் EPRLFவினர் யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளைக்காரர் இருவரைக் கடத்தியபோது சென்னையில் இருந்த நாபாவை பிடித்துச் சென்று உதைத்து அந்த அலன் தம்பதிகளை விடுவித்தது இந்திய அரசு EPRLFவினரின் கோரிக்கையை ஏற்று சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா முன்வந்தார். சிங்கள அரசு முன்வந்தபோதும்கூட அதனை தடுத்து நிறுத்திவிட்டு அலன் தம்பதிகளை விடுவித்தவர் அன்றைய இந்திய அரசின் பிரதமர் இந்திரா காந்தி. அடுத்து, யாழில் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரத்தை இந்திய உளவுப்படையே டெலோ இயக்கத்தின் மூலம் கொன்றது. ஆனால் அதே டெலோ இயக்கத்தின் தலைவர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டபோது அவரை இந்திய அரசு காப்பாற்றவில்லை. சிங்கள அரசு கேட்காமலேயே அலன்தம்பதிகளை விடுதலை செய்வித்த இந்திய அரசு, விரும்பியிருந்தால் சென்னையில் இருந்த பிரபாகரனை பிடித்து டெலோ இயக்க தலைவரை காப்பாற்றியிருக்க முடியும். அதாவது அலன் தம்பதிகளில் இருந்த அக்கறைகூட தமக்காக கொலை செய்த டெலொ இயக்க தலைவர் மீது இந்திய அரசு கொண்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் வேதனை என்னவென்றால் இத்தனை அனுபவங்களை பெற்றபின்பும் , வங்கம் தந்த பாடத்தை அறிந்த பின்பும் இன்றும் இவர்கள் இந்திய அரசின் விசுவாசிகளாக இருக்கின்றனரே?

No comments:

Post a Comment