Wednesday, September 20, 2023

நீ ஊமையாக இருக்கும்வரை

"நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்" தமிழின அழிப்புக்கு நீதி கோரி மக்களினூடாக பயணிக்கும் ஈருளிப் பயணம். 2 நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக கிடக்கும் என இலங்கை இந்திய அரசுகள் நினைத்தன. ஆனால் கடல் கடந்து போனாலும் தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் காட்டி வருகின்றனர். ஓட முடியாதவர்கள் நடப்பார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்து செல்வார்கள். ஆனால் இலக்கை அடையும்வரை அனைவரும் நகர்ந்துகொண்டே இருப்பார்கள். தமிழ் மக்கள் தமது இலக்கை நிச்சயம் அடைவார்கள் ஏனெனில் அதற்காக அவர்கள் பல வழிகளில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment