Saturday, September 30, 2023

விசாரணக்கு தயார் என்றும்

விசாரணக்கு தயார் என்றும் தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு வெடிப்பு திடீரென்று நடந்தது அல்ல. அது நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு நடந்தது என்றும் அவர் கூறியிருக்கின்றார். தமக்கு பிரேமதாசா ஆயுதம் தந்தார். மகிந்தா உதவினார். ஜேவிபி குண்டுகள் தந்தது என்று கூறியிருக்கிறார். இதை அவர் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். ( வீடியோ கீழே பின்னூட்டத்தில் உள்ளது) பிரேமதாசா மற்றும் மகிந்த ராஜபக்சா உதவியது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜே.வி.பி உதவியது என்ற அவரது குற்றச்சாட்டு புதிதாக உள்ளது. இது குறித்து ஜே.வி.பி கட்டாயம் பதில் அளித்தே ஆக வேண்டும். அதேவேளை தமிழ்நாட்டில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பையும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பில் இந்தியாவில் உள்ளவர்களின் தொடர்பு குறித்து இதுவரை பலர் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அரசோ இது குறித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறது. பிள்ளையானின் உரையில் இருந்து தெரியவருவது என்னவெனில் தனக்கு ஆபத்து வருமாயின் தான் பலரை காட்டிக் கொடுப்பேன் என்பதையே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே இப்போது எழும் கேள்வி என்னவெனில் மகிந்த ராஜபக்சா கும்பல் பிள்ளையானை காப்பாற்றுவார்களா அல்லது கைகழுவி விடப் போகிறார்களா என்பதே.

No comments:

Post a Comment