Saturday, September 30, 2023

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்காக

•எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்காக இந்திய அரசு தண்டிக்கப்படுமா? கனடாவில் கனடிய குடியுரிமை பெற்ற சீக்கிய தலைவர் ஒருவரை இந்திய அரசு கொன்றுள்ளது. இதனை இந்திய அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதும் உடனடியாக கண்ணை மூடிக்கொண்டு இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் கூறவில்லை. மாறாக கடந்த மூன்று மாதமாக நன்கு விசாரணை செய்து தேவையான ஆதாரங்களை திரட்டிய பின்பே குறிப்பிட்டிருக்கின்றார். அதுவும் அமெரிக்க, பிரித்தானிய அவுஸ்ரேலிய உளவுதுறைகள் உறுதிப்படுத்திய பின்பே கூறியிருக்கிறார். தமது உளவுத்துறையின் தகவல்களை பெற்ற பின்பே கனடா பிரதமர் இந்தியாவை குற்றம் சாட்டியிருப்பதாக அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இதன் மூலம் கனடா பிரதமரின் கூற்றையே அமெரிக்காவும் கொண்டிருப்பதை உணர முடிகிறது. இதற்கிடையில் தமக்கு பாதுப்பு அளிக்கும்படி பிரித்தானியாவில் உள்ள சீக்கிய மற்றும் காஸ்மீரிய அமைப்புகள் கோரியுள்ளன. தமது குடியுரிமை பெற்றவர்களை பாதுகாக்க வேண்டியது பிரித்தானிய அரசின் கடமை. எனவே பிரித்தானிய அரசு இனி இந்திய தூதரகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் கவனிக்கும். கனடாவில் சீக்கிய தலைவர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசு தண்டிக்கப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காவிடின் இந்திய அரசு தனிமைப்படுத்தப்படும் என்றே தோன்றுகிறது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம். ஆனாலும் ஆட்சிக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி “ என்ன இருந்தாலும் இந்தியா வந்து எமது தலைவர் ஒருவரை கொன்றதை ஏற்க முடியாது” என்றார். இப்போது அவருடைய கட்சியின் அரசு மீதே எல்லை தாண்டி வந்து கனடாவில் தலைவர் ஒருவரை கொன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி பேச பாஜக அரசுக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை.

No comments:

Post a Comment