Saturday, September 30, 2023

கனடிய சீக்கிய தலைவர் கொலையில்

கனடிய சீக்கிய தலைவர் கொலையில் இந்தியாவின் பங்கு இருப்பதற்கு ஆதாரம் இருப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை பல நாடுகளில் 40ற்கு மேற்பட்ட இவ்வாறான கொலைகளை செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதன் மூலம் இப் பிரச்சனையில் அது கனடாவை ஆதரிக்கின்றது. பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலிய நாடுகளும் கனடாவை ஆதரிக்கும் சூழ்நிலைகள் உருவாகின்றன. இந்தியா கனடியர்களுக்கான விசாவை நிறுத்தியுள்ளது. கனடாவும் இந்தியர்களுக்கான விசாவை நிறுத்தினால் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவர். இந்திய மகேந்திரா கம்பனியில் இருந்து கனடிய நிறுவனம் வெளியேறியுள்ளது. இதனால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இனி என்னென்ன நெருக்கடிகள் வரப் போகின்றன என்று உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி பேசுவதற்குரிய தார்மீக தகுதியை இந்தியா இழந்துவிட்டது என்பதை உறுதியாக கூறலாம்.

No comments:

Post a Comment