Wednesday, September 20, 2023

செப்-12 தியாகிகள் தினம்.

• செப்-12 தியாகிகள் தினம். தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோருக்கு வீர வணக்கம் நக்சல்பாரி புரட்சியாளர்கள் நினைவு நீடூழி வாழ்க! வசந்தத்தின் இடி முழக்கம் தூரத்தில் கேட்கிறது என்று தோழர் மாவோ சேதுங் அவர்களால் வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவித்த தியாகிகளை நினைவு கூர்வோம். நக்சல்பாரி புரட்சித் தோழர்கள் அப்பு மற்றும் பாலன் நினைவுகள் நீடூழி வாழ்க. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து எண்ணற்ற புரட்சியாளர்கள் முளைக்கிறார்கள். ஆம், தோழர்கள் அப்பு பாலன் வரிசையில் தோழர்கள் தமிழரசன் புலவர் கலியபெருமாள் என பல புரட்சியாளர்கள் தோன்றினார்கள். இனியும் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புரட்சி என்னும் இலட்சியக் கனவு நிறைவேறும்வரை உருவாகுவார்கள். ஆனால் தோழர்கள் அப்பு , பாலன் வழி வந்த மாவோயிச அமைப்புதான் வீரப்பனை காட்டிக் கொடுத்தது என்று ஊடகவியலாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மாவோயிச அமைப்பின் தமிழக தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி என்பவரே வீரப்பனை காட்டிக் கொடுத்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்று அவர் கூறியிருப்பதை நம்பமுடியவில்லை. ஏனெனில் ஒரு அமைப்பில் ஒரு சில உறுப்பினர்கள் காட்டிக் கொடுப்பவர்களாக மாறலாம். ஆனால் ஒரு மாவோயிச அமைப்பின் தலைமையே காட்டிக் கொடுக்கும் தலைமையாக இருக்க முடியுமா? வீரப்பனைக் காட்டிக் கொடுத்தது மட்டுமன்றி அவர்களே உண்மை அறியும் குழுவை நியமித்து பொய் அறிக்கை வெளியிட்டதாகவும் இவ் ஊடகவியலாளர் குற்றம் சாட்டுகிறார். இது குறித்து மாவோயிச அமைப்பின் பதிலை அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். குறிப்பு – ஊடகவியலாளர் சிவசுப்ரமணியத்தின் வீடீயோ லிங்க் கீழே தந்துள்ளேன்.

No comments:

Post a Comment