Saturday, September 30, 2023

ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்த

•ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்த சர்வதேச விசாரணையை இந்திய அரசு ஆதரிக்குமா? சனல் 4 ஆவணப்படம் வெளிவந்த பின்பு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற குரலகள் பலமாக ஒலிக்கின்றன. ஆனால் இந்திய அரசு மட்டும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருக்கின்றது. இந்திய அரசு சர்வதேச விசாரணையை மட்டுமல்ல இலங்கையில் உள்ளக விசாரணையைக்கூட அனுமதிக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு பற்றியும் கூறியிருக்கிறார். (1) றோ தலைவர் தமக்கு 25000 டாலர் பணம் தந்ததாக குறிப்பிடுகிறார். (2) கேரளாவில் தமது உறுப்பினர்களுக்கு பயிற்சி தரப்பட்டதாக கூறுகின்றார். (3) இந்தியாவின் தாஜ் ஓட்டலில் குண்டு வைக்கப்போனபோது இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறுகின்றார். அதைவிட இச் சம்பவத்திற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா தன்னை இந்திய உளவுப்படை கொல்ல முயற்சி செய்கிறது என்று பகிரங்கமாக கூறியிருந்தார். எனவே விசாரணை என்று ஒன்று வந்தால் இந்திய அரசு பல விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை வரும். அதனால் இந்திய அரசு எந்த விசாரணையும் நடைபெற அனுமதிக்காது. அதைவிட தற்போது கனடாவில் சீக்கிய தலைவரை கொன்ற பிரச்சனையும் வந்துள்ளது. எனவே இலங்கையில் விசாரணைக்கு ஆதரித்தால் கனடா விசாரணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இந்திய அரசுக்கு எற்படும். அதனால் இந்திய அரசு அனைத்து விசாரணைகளையும் மறுக்கும் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment