Wednesday, September 20, 2023

மடியில் கனம் இல்லை எனில்

•மடியில் கனம் இல்லை எனில் நடையில் பயம் எதற்கு? ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் சனல் -4 சுமத்திய குற்றச்சாட்டை கோத்தபாயா மறுத்துள்ளார். கோத்தபாயா மட்டுமன்றி பிள்ளையான் மற்றும் உளவுத்துறை அதிகாரி சுரேஸ் சாலேயும் மறுத்துள்ளனர். இவர்களுக்கு உண்மையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தம் இல்லை எனில் எதற்காக சர்வதேச விசாரணையை மறுக்க வேண்டும்? விசாரணைக்கு ஒத்துழைத்து அதன் மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தாரளமாக நிரூபிக்கலாமே? ஆக, இப்போதுள்ள கேள்வி என்னவெனில் கோத்தபாயா கும்பல் சர்வதேச விசாரணையை ஏற்கிறார்களா இல்லையா என்பதல்ல, மாறாக இலங்கை அரசு இறந்த 269பேருக்குரிய நீதியை எப்போது, எப்படி வழங்கப் போகிறது என்பதே? ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நீதி வழங்கப்பட்டாயேக வேண்டும். ஏனெனில் இனி யாரும் தமது பதவி நலனுக்காக அப்பாவி மக்களை கொல்வதை தடுப்பதற்காக.

No comments:

Post a Comment