Wednesday, September 20, 2023

தமிழ்நாட்டு தமிழர்கள் அண்ணாவை

தமிழ்நாட்டு தமிழர்கள் அண்ணாவை புகழவும் இகழவும் ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர் நாம் அவரை நினைவுகூர ஒரு காரணம் உண்டு. இலங்கையில் தமிழருக்கு எதிராக முதல் இனக்கலவரம் 1956ல் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் தலைவர் அண்ணா. இலங்கை பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா இந்திய பிரதமர் பண்டிதர் நேருவை சந்தித்தபோது “ பண்டிதரோ மனைவியை இழந்தவர். பண்டாரநாயக்காவோ கணவனை இழந்தவர். இருவரும் தனிமையில் சந்தித்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நீ அறியமாட்டாயோ தம்பி” என்று கிண்டலாக பேசினார். அண்ணாவுக்கும் நடிகை பாணுமதிக்கும் உறவு இருந்தது. இது பற்றி கேட்டபோது “ நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை. அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை” என்றாராம். ஒருவேளை சீமானும் நடிகை விஜயலட்சுமி பற்றி கேட்டபோது இப்படி அண்ணா மாதிரி கூறியிருக்க வேண்டுமோ?😂

No comments:

Post a Comment