Thursday, February 15, 2024

சாந்தனிடம் கடவுச்சீட்டு இருக்கிறது.

சாந்தனிடம் கடவுச்சீட்டு இருக்கிறது. அதனை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தால் புதுப்பிக்க முடியும். அப்படியிருக்க எதற்காக இலங்கையில் இருந்து கடவுசீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்? அப்படி அனுப்புவதாக இருந்தாலும் சென்னை இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி அங்கு வைத்து சாந்தனிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதானே நடைமுறை. அதைவிடுத்து எதற்காக இந்திய வெளியுறவு அமைச்சுக்கு சாந்தன் கடவுச்சீட்டு அனுப்ப வேண்டும்? சாந்தன் 15 மாதங்களாக இலங்கை திரும்ப முடியாமைக்கு உண்மையான காரணம் (1) சிறப்புமுகாமில் இருந்து சாந்தன் நாடு திரும்புவதற்குரிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. (2) சாந்தன் தன் கடவுச்சீட்டை புதுப்பிக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் செல்வதற்குரிய பயண ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யவில்லை. அறிக்கைவிடும் இலங்கைத் தலைவர்கள் உண்மையில் சிறப்புமுகாம் நடைமுறைகளை அறிந்து அறிக்கை விடுகின்றனரா? அல்லது, தாமதத்திற்கு காரணமான இந்திய மத்திய மாநில அரசுகளை காப்பாற்றுவதற்காக அறிக்கை விடுகின்றனரா?

No comments:

Post a Comment