Thursday, February 15, 2024

சாந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினரால்

சாந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினரால் உயிராபத்து ஏற்படலாம் என்பதாலே சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறுகின்றார். உச்சநீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்ட ஏழு தமிழரில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களில் யாருக்கும் யாராலும் எந்த ஆபத்தும் இதுவரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை. உண்மைநிலை இப்படியிருக்க சாந்தனுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியால் உயிராபத்து ஏற்படும் என்று தமிழக அரசு அடைத்து வைத்திருப்பதாக எப்படி இவர் கூறுகின்றார்? அதுமட்டுமல்ல, சாந்தன் தன்னை தமிநாட்டில் நடமாட அனுமதிக்கும்படி கேட்கவில்லை. தன்னை இலங்கை அனுப்பி வைக்குமாறே கேட்கிறார். இலங்கை திரும்ப விரும்புபவரை எதற்கு சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? இவர் உண்மையில் சாந்தன் நிலை அறிந்து பேசுகின்றாரா? அல்லது யாழ் இந்திய தூதரை மகிழ்விப்பதற்காக இப்படி கூறுகின்றாரா?

No comments:

Post a Comment