Thursday, February 15, 2024

நடிகர் ரஜனி மத்திய அரசில் மட்டுமல்ல

நடிகர் ரஜனி மத்திய அரசில் மட்டுமல்ல மாநில அரசிலும் செல்வாக்கு உள்ளவர். அவர் குரல் கொடுத்தால் பிரதமர் மோடி மட்டுமல்ல தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேட்பார். நடிகர் ரஜனி ஈழத் தமிழ தலைவர்களில் ஒருவரான விக்கினேஸ்வரன் அவர்கள் மீது மதிப்பு கொண்டவர் என்கிறார்கள். எனவே விக்கினேஸ்வரன் அவர்கள் நடிகர் ரஜனி மூலம் சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு வழி காண வேண்டும். பிரேமானந்த சுவாமி பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயள் தண்டனை வழங்கப்பட்டவர். அவரை விடுதலை செய்யுமாறு விக்கினேஸ்வரன் அவர்கள் கோரியிருந்தார். பிரோமானந்தா சுவாமி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும்போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு கோரியிருந்தார். ஆனால் சாந்தன் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். இது எந்தளவு சட்டவிரோதமானதும் மனிதாபிமானம் அற்றதும் என்பது நீதிபதியாக இருந்த விக்கினேஸ்வரன் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே பிரேமானந்த சுவாமிக்காக கரல் கொடுத்த விக்கினேஸ்வரன் அவர்கள் சாந்தனுக்காக குரல் கொடுக்கக்கூடாதா?

No comments:

Post a Comment