Wednesday, February 28, 2024

மனிதனே கடவுளை படைக்கிறான்

மனிதனே கடவுளை படைக்கிறான் அப்புறம் அக் கடவுளே மனிதனை படைத்ததாக கூறுகின்றான் “கடவுள் எல்லாம் வல்லவர். கடவுள் எங்கும் இருக்கிறார்” என்கிறான் அந்த மனிதன் எல்லாம் கடவுள் விதிப்படியே நடக்கிறது. அந்த விதியை யாராலும் மாற்ற முடியாது என்கிறான் அப்புறம் அவனே வீதியைக் கடக்கும் போதுகூட கடவுள் விதியை நம்பாமல் வீதி சிக்னல் லைட் விதியை நம்பியே கடக்கிறான். இப்ப, “கடவுள் களைத்து விட்டார். எனவே தினமும் மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார்” என்கிறான். இன்னும் என்னென்ன சொல்லப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மதம் ஒரு அபின் போதை. பக்தி ஒரு மன நோய் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment