Thursday, February 15, 2024

இவர் சாந்தனின் தாயார் என்பது

இவர் சாந்தனின் தாயார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் எங்கே சென்றுவிட்டு வருகின்றார் என்று யாருக்காவது நினைவு இருக்கிறதா? கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் மகனை வருவித்து தருமாறு கோரி ஜனாதிபதி மற்றும் உரியவர்களுக்கு மனு கொடுத்து விட்டு வருகின்றார். ஆனால் ஆச்சரியம் என்னவெனில், ஜனாதிபதி சாந்தனை அழைத்துவர உறுதி தெரிவித்ததாகவும் ஆனால் இதற்கு சாந்தன் தாயாரிடமிருந்து ஒரு மனுவும் தமிழரசுக்கட்சி சார்பாக ஒரு மனுவும் தரும்படி கேட்டதாக சிறீதரன் கூறியுள்ளார். சாந்தன் இலங்கை பிரஜை. அவர் இலங்கை வருவதற்கு தயாரிடம் மனு எதற்கு? அதைவிட, அவர் ஏற்கனவே மனு கொடுத்துள்ள நிலையில் மீண்டும் மனு எதற்கு? அதையும்விட, இதற்கு எதற்கு தமிழரசுக்கட்சியின் மனு வேண்டும்? ஜனாதிபதி காலம் கடத்துவதற்காக இதை கேட்கிறாரா? அல்லது சிறீதரன் அறிக்கைவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகிறாரா?

No comments:

Post a Comment