Thursday, February 29, 2024

இந்த தாய் சிந்தும் கண்ணீருக்கு

இந்த தாய் சிந்தும் கண்ணீருக்கு யார்தான் பதில் சொல்வது? இந்த தாய் அப்படி என்ன பெரிதாக கேட்டுவிட்டார்? சாவதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதுதானே அவரது 33 வருட ஆசையாக இருந்தது. சிறையில் தூக்குத் தண்டனை கைதியிடம்கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு நிறைவேற்றுவார்களே சாந்தனின் கடைசி ஆசை தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதுதானே. அதைக்கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு சிறையைவிடக் கொடியதா சிறப்புமுகாம்? ஆட்சியாளரின் அரக்க இதயத்தில் ஒரு துளி இரக்கம்கூட இல்லையா. இதுதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

No comments:

Post a Comment