Friday, June 30, 2023

2317வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

2317வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் தொடர்கிறது. புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதால் நசுக்கியதாக கூறும் இலங்கை இந்திய அரசுகள் அகிம்சை வழியில் போராடும் இவர்களுக்கு இதுவரை ஒரு பதில் கூறவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவ் உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தல் வழியாகவே சென்றார். ஆனால் இவர்களை கண்டுகொள்ளவில்லை. அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தார். அவரும் இவ் உறவுகளை கண்டு கொள்ளவில்லை. இவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் இவர்களை சந்தித்து ஒரு ஆறுதலாவது தெரிவித்திருக்கலாம். சுமார் ஆறுவருடங்களாக வீதியில் உட்கார்ந்து அகிம்சை வழியில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர் ஒரு ஆறுதல் கூட சொல்ல இரங்காதவர் ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தரப் போகிறார் என்று லண்டனில் சிலர் உறவுப் பாலம் கட்டுகின்றனர். என்னே கொடுமை இது? தமிழனுக்கு மூளை இல்லை என்று நினைக்கின்றனரா அல்லது மூளை முழங்காலில் இருக்கிறது என்று கருதுகின்றனரா?

No comments:

Post a Comment