Tuesday, June 27, 2023

ஒருநாள் சாமியார் ஒருவர் போஸட் ஆபிசுக்கு

ஒருநாள் சாமியார் ஒருவர் போஸட் ஆபிசுக்கு வழி தெரியாமல் வீதியால் வந்த சிறுவன் ஒருவனை மறித்து “ தம்பி! போஸ்ட் ஆபிசுக்கு போகும் வழி தெரியுமா?” என்று கேட்டார். அந்த சிறுவனும் “ஆம் தெரியும்” என்று கூறிவிட்டு சாமியாருக்கு போஸ்ட் ஆபிஸ் போகும் வழியை காண்பித்தான். அதற்கு சாமியார் “ ரொம்ப நன்றி தம்பி! உன்னைப் பார்த்தா நல்ல பையனாக தெரியுது. என் மடத்திற்கு வா உனக்கு சொர்க்கத்திற்கு போகும் வழியை நான் காண்பிக்கிறேன்” என்றார். உடனே அந்த சிறுவன் “ போஸ்ட் ஆபீசுக்கு போகும் வழியே உங்களுக்கு தெரியவில்லை. உங்களால் எப்படி சொர்க்கத்திற்கு போகும் வழியைக் காட்ட முடியும்?” என்று கேட்டான். இதில் வரும் சாமியார் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா இல்லை. ஆனால் அவரிடம் இதே போன்ற ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. முருகன் ஒரு இந்து. அதுமட்டுமல்ல அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார். ஆனாலும் அவரை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஈழ இந்து அகதிகளுக்கு உதவாத இந்திய அரசு, இந்துத் தமிழீழம் எடுக்க உதவும் என எப்படி நம்புவது? மறவன்புலவு சச்pதானந்தம் ஐயா அவர்களே உங்கள் பதில் என்ன?

No comments:

Post a Comment