Tuesday, June 27, 2023

கடந்த வருடம் பொருளாதார

கடந்த வருடம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தம்மீது இரக்கம் காட்டும்படி எந்த சிங்களவரும் சுமந்திரனிடம் கேட்கவில்லை. ஆனாலும் சிங்களவர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கும் உணவு அனுப்பும்படி தமிழக முதல்வரிடம் கேட்டார் சுமந்திரன். சுமந்திரன் கேட்டபடி தமிழக முதல்வர் சிங்களவர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கும் உணவு அனுப்பி வைத்தார். தம் மீது இரக்கம் கொண்டு தமக்காக குரல் கொடுக்கும்படி முருகன் மற்றும் சாந்தனின் தாய்மார்கள் சம்பந்தர் ஐயாவிடம் கேட்டார்கள். ஆனால் அவர்கள் கேட்டும்கூட சம்பந்தர் ஐயா இதுவரை இரங்கவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கவும் இல்லை. சிங்களவர்களுக்காக இரங்கி தமிழக முதல்வரிட்ம் கோரிய சுமந்திரனும் இந்த நான்கு தமிழர்களுக்காகவும் இரங்கி தமிழக முதல்வரிடம் கோரவில்லை. எந்தவித உறவும் அற்ற செங்கொடி இந்த ஏழு தமிழர் விடுதலைக்காக தீக்குளித்து உயிரை விட்டார். ஆனால் தமிழர் வாக்கில் பதவி பெற்றுள்ள இந்த தலைவர்கள் ஏன் இந்த நான்கு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர்?

No comments:

Post a Comment