Friday, June 30, 2023

யாருக்கும் வெட்கம் இல்லை

• யாருக்கும் வெட்கம் இல்லை லண்டன் வந்த ஈழத் தமிழ் பெண் குடியுரிமை பெற்று உதவி மேயராகியுள்ளார். அவர் அருகில் உட்கார அண்ணாமலை அவர்கள் வெட்கப்படவில்லை. இந்தியா சென்ற ஈழத் தமிழர்கள் 40 வருடங்களாக குடியுரிமை இன்றி அகதிகளாகவே உள்ளனர். அந்த இந்திய அரசின் பிரதிநிதி அண்ணாமலை அவர்களின் அருகில் உட்கார அவ் உதவி மேயர் பெண்ணும் வெட்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு கோராத அண்ணாமலை, இலங்கையில் தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு இந்திய அரசிடம் கோரப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போறன் என்றானாம்.

No comments:

Post a Comment