Tuesday, June 27, 2023

இங்கிலாந்தில் ஈழத் தமிழர்

இங்கிலாந்தில் ஈழத் தமிழர் அரவிந்தன் குமாரசுவாமி மருத்துவ துறையில் செய்த ஆராயச்சிக்காக பிரிட்டனின் அதி உயர் விருதுகளில் ஒன்றான OBE வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவில் ஈழத் தமிழ் மாணவி ஒருவர் சிறந்த புள்ளிகள் பெற்று அமைச்சரின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஆனால் அவர் தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதாகவும் அகதிகள் மருத்துவ கல்வி பெற முடியாது என்பதால் வேறு வழியின்றி வர்த்தகம் படித்ததாக கூறுகின்றார். இங்கிலாந்து சென்ற ஈழத் தமிழர் மருத்துவம் படிக்க முடிகிறது. மருத்துவராக பணி புரிந்து உயர் விருது பெற முடிகிறது. ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழர் மருத்துவ கல்வியைக்கூட பெற முடியாத நிலை. ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இக் கொடுமைக்கு முடிவு காண்பார்களா? அல்லது, அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்து உறவுப்பாலம் கட்டுவோர் இந்த கொடுமைக்கு ஒரு தீர்வு காண்பார்களா?

No comments:

Post a Comment