Tuesday, June 27, 2023

கீழே உள்ள படத்தைக்காட்டி

கீழே உள்ள படத்தைக்காட்டி மகிந்த ராஜபக்சாவிடம் கருத்து கேட்டால் “ நீருக்குள் தவித்த மீனுக்கு பாம்பு உதவி செய்கிறது” என்று கூறுவார். ஆம். ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்காக தமிழ் மக்களை கொன்றதாக அவர் கூறினார். அதுபோல இப்போது ஒரு ஊடகவியாபாரிக்கு மக்கள் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருப்பது ரணில் மற்றும் கஜேந்திரகுமார் சேர்ந்து நடத்தும் நாடகமாக தெரிகிறது. கஜேந்திகுமார் பொன்னம்பலத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை , எம்.பி சிறீதரன் கண்டித்துள்ளார். எம்.பி விக்கினேஸ்வரன் கண்டித்துள்ளார். எம்.பி சாணக்கியன் கண்டித்தள்ளார். எம்.பி சித்தார்த்தன் கண்டித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து சீமான் கண்டித்துள்ளார். ஆனால் ஊடக வியாபாரிக்கு மட்டும் இது நாடகமாக தெரிகிறது. என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment