Tuesday, June 27, 2023

லண்டனில் நாலு செம்மறி ஆடுகள்

லண்டனில் நாலு செம்மறி ஆடுகள் உறவுப்பாலம் அமைக்கப்போவதாக கூறி இந்தியாவில் இருந்து ஒரு ஆட்டை அழைத்து வந்தன. வந்திருப்பது ஆடு அல்ல தம்மை கடித்து குதறும் ஓநாய் என்பது புரியாமல் ஆடு பேசும்போது செம்மறி ஆடுகள் தலையை ஆட்டி ஆட்டி கைதட்டின. 2009ல் முள்ளிவாய்க்காலில் இந்திய அரசு நடந்துகொண்ட விதம் தவறு. அதனை நான் கண்டிக்கிறேன் என்று கண்ணீர் விட்டது அந்த ஓநாய். அப்படியென்றால் ஜநாவில் ஏன் இன்னமும் இந்திய அரசு சிங்கள அரசைக் காப்பாற்றுகின்றது என்று ஒரு (செம்மறி) ஆடுகூட எழுந்து கேட்கவில்லை. தன்னைக் கொலை செய்தவன், தன்னைக் கொலை செய்ய உதவி செய்தவன் கண்ணீர் விடும்போது அதனை நம்பிக் கை தட்டும் ஒரே இனம் இந்த செம்மறி ஆடுகள்தான். என்ன செய்வது (செம்மறி) ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன.

No comments:

Post a Comment