Tuesday, June 27, 2023

சிறப்புமுகாம் தொடர்பான வழக்கொன்றில்

சிறப்புமுகாம் தொடர்பான வழக்கொன்றில் ( WP 15044/91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப்சிங் வழங்கிய தீர்ப்பில் நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்த செலவிலோ அல்லது அரசு செலவிவோ அனுப்பி வைக்க வேண்டும் என் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சாந்தன் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்தும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். சிறப்புமுகாமில் உள்ளவர்களை சிறையில் உள்ளது போன்று செல்லில் வைத்து பூட்டி வைக்க முடியாது என்றும் அவர்கள் சிறப்புமுகாமில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் சாந்தன் உட்பட நான்கு தமிழர் சூரிய வெளிச்சமே படாத அறையில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். மற்ற அகதிகளுடன் பழக விடாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்புமுகாம் சித்திரவதையை தாங்க முடியாமல் அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் லண்டன் வந்த அண்ணாமலை தாம் இலங்கையை சகோதர நாடாக கருதி உதவுவதாக கூறுகின்றார். உலகில் எந்த சகோதரன் தன் சகோதரனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறான்?

No comments:

Post a Comment