Tuesday, June 27, 2023

கேள்வி – சமூகவலைத்தளங்களில் சில திமுக வினர்

கேள்வி – சமூகவலைத்தளங்களில் சில திமுக வினர் ஏன் புலிகளை இழிவாக விமர்சிக்கின்றனர்? பதில் - ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமிக்கவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் தனது அதிகாரம் மற்றும் பண பலத்தை வைத்து ஈழத் தமிழருக்கு தாம் செய்த துரோகத்தை மறைக்க முயல்கிறது அதனால்தான் தன் பினாமிகளை வைத்து இம்முறை இலங்கையில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் கலைஞர் பிறந்தநாளை அது கொண்டாடுகிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் தம் துரோகத்தை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்டதும் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த அது முனைகிறதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் லண்டனில் ஈழத் தமிழர் அதிகமாக வாழும் ஈஸ்ட்காம் நகரில் அடுத்தடுத்து இரண்டு கலைஞர் பிறந்தநாள் விழாக்களை அது நடத்துகின்றது. எனவே திமுக வின் சதிக்கு பலியாகாமல் ஈழத் தமிழர்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment