Tuesday, June 27, 2023

ஈழத்து சிவசேனைத் தலைவர்

ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து இந்து முருகன் அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்பாரா என நேற்று ஒரு பதிவில் கேட்;டிருந்தேன். அதற்கு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெயரில் ஒரு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் தன் பிரச்சனைக்கே குரல் கொடுக்கவில்லை என கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான பதில் அல்ல. முதலாவது, சச்சிதானந்தம் அவர்களது பிரச்சனையும் முருகனதும் பிரச்சனையும் ஒன்றல்ல. இரண்டாவது, ஒன்றாக இருந்தாலும்கூட தன் பிரச்சனைக்கு கேட்கவில்லை என்பது முருகனுக்கு ஏன் கேட்கவில்லை என்பதற்கான உரிய பதில் இல்லை. மூன்றாவது , புத்த பிக்கு உட்கார தன் வேட்டியை உரிந்து கொடுத்தவர் இந்து முருகனுக்காக குரல் கொடுக்க ஏன் மறுக்கிறார்? நான்காவது, இந்திய இந்து அரசு ஈழத்து இந்துக்களுக்கு உதவும் என பிரச்சாரம் செய்பவர் ஈழத்து இந்துவான முருகனுக்கு ஏன் இந்திய அரசு உதவவில்லை என்பதற்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார். ஐந்தாவது, கிருத்தவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மத வேறுபாடுகளை தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கும் சச்சிதானந்தம் தன் இந்து மதத்தை சேர்ந்த முருகனுக்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார் என்பதற்கு தகுந்த பதில் தர வேண்டும்.

No comments:

Post a Comment