Tuesday, June 27, 2023

இளங் காற்றில் சிட்டுக்குருவிகள்கூட

இளங் காற்றில் சிட்டுக்குருவிகள்கூட பறக்க முடியும். ஆனால் புயல் காற்றில் கழுகுகளால் மட்டுமே பறக்க முடியும். ஒருபுறம் தாயகத்தில் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி காலத்தை கழிக்கின்றனர். மறுபுறத்தில் புலத்தில் ஒரு சில அமைப்பினர் அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டுவதாக கதை விடுகின்றனர். இந்நிலையில் தலைவர்களை விலைக்கு வாங்கலாம் ஆனால் எம்மை வாங்க முடியாது என்பதை புலம் பெயர்ந்த மக்கள் நிரூபித்து வருகின்றனர். புலம்பெயர்ந்த மக்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் எழுந்து நிற்க முயலுகின்றனர். அதனால்தான் சிங்கள அரசால் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. உலகம் இந்த அதிசயத்தை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. ஏனெனில் இப்போது போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் அடுத்த சந்ததியினர்.

No comments:

Post a Comment