Tuesday, June 27, 2023

இருவரும் ஈழத் தமிழர்

இருவரும் ஈழத் தமிழர் ஒருவர் அகதியாக கனடா சென்றதால் குடியுரிமை பெற்று அங்கு எம்.பி யாகி உள்ளார். மற்றவர் அகதியாக இந்தியா சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளித்துள்ளார். 1990ல் கலைஞர் ஆட்சியில் ஆரம்பித்த சிறப்புமுகாம் கொடுமை அவர் மகன் ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்கிறது. சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இலங்கை திரும்ப விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தமிழக முதல்வர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக சாந்தனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறார். சாந்தன் தனது சொந்த செலவில் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்தும் தமிழக முதல்வர் அனுமதி அளிக்க மறுக்கிறார். இது குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு சாந்தன் மனு அனுப்பியும் இந்திய அரசும் அக்கறை இன்றி இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்ட முனைவோர் குறைந்த பட்சம் இந்த சாந்தன் விடுதலைக்காவது குரல் கொடுப்பார்களா?

No comments:

Post a Comment