Tuesday, June 27, 2023

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும்

"நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்" - மாவோ அன்று தந்தை செல்வாவின் அகிம்சை வழிப் போராட்டம் சிங்கள அரசால் நசுக்கப்பட்டதாலே வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் பரிணமித்தது. இன்றும் தமிழ் மக்களின் அகிம்சை வழிப் போராட்டங்கள் சிங்கள அரசால் அடக்கி ஒடுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் முப்பது கைதுகள் நடந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுகாஸ் கூறுகின்றார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்கள் எனில் சாதாரண மக்களின் நிலை என்ன? ஒருபுறம் தமிழர் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்களை அழித்து புத்த விகாரைகள் கட்டுகின்றனர். இன்னொருபுறம் தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிகழ்த்துகின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அகிம்சை வழியிலான போராட்டங்களை நசுக்குகின்றனர். வேறு வழியின்றி மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலையை தமிழ் மக்கள் மீது திணிக்கின்றனர்.

No comments:

Post a Comment