Tuesday, June 27, 2023

மாகாணசபைக்கு ஒரு மேசை கதிரை கூட

மாகாணசபைக்கு ஒரு மேசை கதிரை கூட வாங்க அதிகாரம் இல்லை என்று கூறி தமிழீழம் பிரகடனம் செய்துவிட்டு ஓடியவர்கள், இப்ப வந்து கூறுகின்றார்கள் நாபாவின் தீர்க்கதரிசனத்தை ஏற்றிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமாம். சரி, பரவாயில்லை. கடந்த 14 வருடமாக புலிகளும் இல்லை. எந்த ஆயுதக் குழுவும் இல்லை. ஏன் இலங்கை இந்திய ஒப்பந்தப்படி மாகாணசபையை அமுல்படுத்த முடியவில்லை? இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இந்திய அரசு தனது நலன்களை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி கிடைத்த மாகாணசபை தீர்வை அமுல் படுத்த இந்திய அரசு ஏன் முனையவில்லை?

No comments:

Post a Comment