Tuesday, June 27, 2023

சீமான் மற்றும் திருமுருகன்காந்தி

சீமான் மற்றும் திருமுருகன்காந்தி உட்பட பலரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு தமிழக அரசு காரணம் இல்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்கியமைக்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரந்திற்காக குரல் கொடுத்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். முதலாளித்துவம் வழங்குகின்ற அற்ப ஜனநாயகத்தைக்கூட மறுக்கின்ற இந்திய அரசின் செயல் பாசிசத்திற்கு ஒப்பானதாகும். ஒரு எம்.எல்.ஏ பதவிகூட இல்லாத சீமான் மற்றும் திருமுருகன் காந்தி போன்றவர்களின் கருத்தைக்கூட அனுமதிக்க இந்திய அரசு மறுக்கிறது. ஆனால் சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் எப்படி நிறுத்த முடியாதோ அதேபோல டிவிட்டரை தடை செய்வதால் இவர்களின் குரலை அடக்க முடியாது என்பதை இந்திய அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும். அது சரி, சாதாரண தனிநபரான எனக்கு ஏன் இந்திய அரசு அச்சம் கொள்கிறது? என்னுடைய டிவிட்டரை ஏன் தடை செய்கிறது?

No comments:

Post a Comment