Tuesday, June 27, 2023

பாராட்டுகளும் வாழ்த்துகளும்

•பாராட்டுகளும் வாழ்த்துகளும் மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் (வயது -31) யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவுசெய்து சாதனை படைத்துள்ளனர். சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில், நடைபயணமாக கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். 1986ம்’ ஆண்டு நானும் என் தோழர்கள் 20 பேருடன் மட்டக்களப்பு கன்னங்குடாவில் இருந்து காடுகள் வழியாக சுண்டிக்குளம் மருதங்கேணியை நடந்து வந்தடைய 12 நாட்கள் பிடித்தது நினைவுக்கு வருகிறது. எனக்கு சயிக்கிளில் இலங்கையை சுற்றிவர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

No comments:

Post a Comment