Tuesday, June 27, 2023

காத்திருப்பு நீள்கிறது

காத்திருப்பு நீள்கிறது தவிப்பு தொடர்கிறது எப்போது விடுதலை ஆவார்கள் இந்த நாலு ஈழத் தமிழரும்? “32 ஆண்டுகளாக அம்மாவை பார்க்கவில்லை. அப்பாவின் கடைசி காலத்தில் அவரின் அருகில் இருந்து கடமைகளை செய்ய முடியவில்லை என்ற உறுத்தல் என்னை உருக்குலைக்கிறது. வயதான அம்மாவுடன் வாழ வேண்டும் என்ற என் ஆசை தவறு என்றால் யாரும் ஆதரவு தர வேண்டாம்;” என சாந்தன் கோரியுள்ளார். அவருக்கு நாம் என்ன பதில் அளிக்கப் போகிறோம்? இந்த நாலு தமிழரும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டபோது இவர்களால் சிறப்புமுகாம் உலகின் கவனத்தை பெறும் என எதிர் பார்த்தோம். இதனால் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெற வழி கிடைக்கும் என நம்பினோம் ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நால்வரையும் மறந்துவிட்டோம். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தமது சொந்த செலவில் தாயகம் திரும்ப விரும்பினால் உடன் அனுப்பி வைக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. சிறப்புமுகாம் தமிழக முதல்வரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. ஆனால் தமிழக முதல்வர் சாந்தன் நாடு திரும்ப அனுமதி அளிக்க மறுக்கிறார். இந்திய பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியும் அவரும்கூட சாந்தனுக்கு உதவவில்லை. ஓடி ஓடி ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? பேறறிவாளன் தாயார் அற்புதம்மாவுக்கு இரங்கிய தமிழகம் சாந்தனின் தாயாருக்கு இரங்குமா? சாந்தன் தன் தாயாரை இறப்பதற்கு முன் காண தமிழக மக்கள் வழி சமைப்பார்களா?

No comments:

Post a Comment