Tuesday, June 27, 2023

தான் இறப்பதற்கு முன்னர் தமிழரசுக்கட்சிக்கு தன்னைப்போல்

தான் இறப்பதற்கு முன்னர் தமிழரசுக்கட்சிக்கு தன்னைப்போல் புத்தியுள்ள ஒரு தலைவரை தெரிவு செய்ய சம்பந்தர் ஐயா விரும்பினார். அதனால் தலைவர் பதவிக்கு ஆசைப்படும் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசாவின் அறிவை சோதிக்க தன் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார். முதலில் வந்த மாவை சேனாதிராசாவிடம் வெறும் பத்து ரூபாவைக் கொடுத்து தனக்கு ஒரு பென்;ஸ் கார் வாங்கி வரும்படி சம்பந்தர் ஐயா கூறினார். மாவை சேனாதிராசாவும் சரி என்று கூறி பத்து ரூபாவை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அடுத்து சுமந்திரனிடம் தன் வீட்டுக்கு சென்று தான் அங்கு இருக்கிறேனா என பார்த்து வரும்படி சம்பந்தர் ஐயா கூறினார். சுமந்திரனும் சரி என்று கூறிவிட்டு வெளியே வந்தார். வெளியே வந்த மாவை சேனாதிராசா சுமந்திரனிடம் “ ஐயாவுக்கு வயசாகிவிட்டது. அதனால இன்று ஞாயிற்றுக்கிழமை கடை திறக்காது என்பதுகூட மறந்துவிட்டது” என்றார். அதற்கு சுமந்திரன் “ ஆமாம். ஐயாவுக்கு அறளை பெயர்ந்துவிட்டது. தான் வீட்டில் இருக்கிறேனா என போன் அடித்து கேட்கலாம். அதைவிடுத்து என்னை போய் பார்க்கும்படி கூறுகின்றார்” என்றார். சரி. இதை பொறுமையாய் படித்தவர்களிடம் ஒரு கேள்வி. இந்த இருவரில் யார் புத்திசாலி என்று சம்பந்தர் ஐயா முடிவு செய்திருப்பார்? குறிப்பு - இது ஒரு நகைச்சுவைப் பதிவு. எனவே சுமந்திரன் தம்பிகள் கோபம் கொள்ள வேண்டாம்.😂

No comments:

Post a Comment