Wednesday, January 31, 2018

தமிழன்- சுவாமிஜி! பஸ் கட்டணம் உயர்த்தி விட்டார்கள். அதற்காக உங்கள் சீடர்கள் போராடுவார்களா?

தமிழன்- சுவாமிஜி! பஸ் கட்டணம் உயர்த்தி விட்டார்கள். அதற்காக உங்கள் சீடர்கள் போராடுவார்களா?
நித்தியானந்தா சுவாமி- நாங்கள் ஆண்டாளுக்கு மட்டும்தான் போராடுவோம். தமிழனுக்காக எல்லாம் போராட மாட்டோம்.
தமிழன்- ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ராஜாஜியே கூறியுள்ளார். அவரை எதிர்க்காமல் வைரமுத்துவை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?
நித்தியானந்தா சுவாமி- ராஜாஜி பார்ப்பான். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சூத்திரன் வைரமுத்து எம் மதத்தை பழிக்க விடமாட்டோம்.
தமிழன்- சுவாமிஜி! நீங்களும் ரஞ்சிதா மேடமும் ஒன்றாக இருந்த படுக்கை அறைக் காட்சிகள் உண்மைதான் என்று பகுப்பாய்வு அறிக்கை வந்துள்ளதே?
நித்தியானந்தா- நான் கடவுள் கண்ணன் போன்றவன். ரஞ்சிதா இந்தக் காலத்து ஆண்டாள் போன்றவள். எங்கள் திருவிளையாடல்களை நீதிமன்றம் விசாரணை செய்யமுடியாது.
தமிழன்- அந்த வழக்கில் உங்களை பொலிஸ் கைது செய்வதில் இருந்து தப்புவதற்காகவே ஆண்டாள் பிரச்சனையில் நீங்கள் ஓவராக சவுண்டு கொடுப்பதாக கூறுகிறார்களே?
நித்தியானந்தா சுவாமி - இப்போது இருப்பது நம்ம மோடியின் அரசு. கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டேன். எனவே என்மீது இனி தமிழ்நாடு பொலிஸ் கைவைக்க முடியாது.
தமிழன்- ??????
குறிப்பு-
உடனடியாக நித்தியானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
நித்தியானந்தா மடத்தில் உள்ள சிறுமிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
சமூக அக்கறை உள்ளவர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment